'யாழ்ப்பாணத்தில் 750 மில்லியன் ரூபா செலவில் புதிய நவீன ஹோட்டல் ஒன்று அமைப்பதற்கு இன்றைய தினம் (03) இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணம் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்...'
ஜெட்வெயிங் யாழ்.ஹோட்டல் என்னும் பெயரில் யாழ்.மணிக்கூட்டு வீதியில் 76 அறைகளைக்கொண்டு 14 மாடிகளுடன் 18 மாத காலத்தில் இக்ஹோட்டல் அமைக்கப்படவுள்ளது. என திட்ட அறிமுக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இக்ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு வைபவமானது யாழ்.நகரில் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும்' என நிகழ்வில் உரையாற்றிய ஜெட்வெயிங் பிறைவேற் லிமிட்டெற் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார் .
உண்மையிலேயே யாழ்.நகரில் இவ்வாறானதொரு ஹோட்டல் அமைவதனால் யாழ்ப்பாணத்தில் தொழில் வளங்கள் பெருகும் என்பதோடு சுற்றுலாத்துறையில் பெருமளவில் வளர்ச்சியடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை.
Friday, February 3, 2012
Subscribe to:
Comments (Atom)



